tamilnadu

img

30 நாட்களுக்குள் நிலுவைத் தொகை ராஜஸ்ரீ கரும்பு ஆலை நிர்வாகம் உறுதி

விழுப்புரம், நவ.26- முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ கரும்பு சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு வழங்க வேண்டி நிலுவைத் தொகையை 30 நாட்க ளுக்குள் வழங்குவதாக ஒப்புக்கொண்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் உள்ள ராஜஸ்ரீ ஆலை நிர்வாகம் 2004-2005 மற்றும் 2008 -2009 ஆம் ஆண்டுகளில் கரும்பு அனுப்பிய விவசாயி களுக்கு, லாபத்தில் பங்கை உயர்நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில் சர்க்கரை துறை ஆணையர் ரூ.12.5 கோடியை விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், இதுநாள் வரை வழங்காமல் இழுத்தடித்து வரும் முண்டியம்பாக்கம் ராஜஸ்ரீ நிர்வாகத்தை கண்டித்தும் பாக்கித் தொகையை உடன டியாக வழங்க கோரியும் நவம்பர் 29 ஆம் தேதி கரும்பு சங்கத்தின் கவுரவத் தலைவர் முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி, சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், மாநிலத் தலைவர் எஸ்.வேல்மாறன் ஆகி யோர் தலைமையில் சர்க்கரை ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (நவ.26) விக்கிர வாண்டி வட்டாட்சியர்  அலுவல கத்தில் வட்டாட்சி யர் யுவராஜ் தலைமையில் டி.எஸ்.பி நந்தகுமார், சங்கத் தலைவர்கள், ஆலை நிர்வாகிகள் கலந்து கொண்ட சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 30 நாட்களுக்குள் நிலுவைத் தொகையை வழங்குவதாக ஆலையின் உதவி மேலாளர் சிவாஜி உறுதியளித்தார். இதனை அடுத்து போராட்டத்தை தற்காலிகமாக தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஒத்தி வைத்தனர். இந்த பேச்சுவார்த்தையில் சங்கத்தின் நிர்வாகிகள் பழனி,சுரேந்திரன், ராஜா ராமன், ஏழுமலை, சுரேஷ் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.