சென்னை, ஜூன் 27- சென்னை நகரில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவு கிறது. நிலத்தடி நீரும் குறைந்து விட்டதால் தண்ணீ ருக்காக மக்கள் காலி குடங்களுடன் அலை கிறார்கள். தண்ணீர் பிரச்சனையை சமாளிக்க சென்னை குடிநீர் வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. லாரிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மெரினா கடற்கரை யோரம் உள்ள மணல் பரப்பில் தோண்டினால் சில அடி ஆழத்தில் உப்பு இல்லாத தண்ணீர் கிடைக்கும். இதையடுத்து கடற்கரை மணல் பரப்பில் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் 6 போர்வெல் அமைக்கப்பட்டு அதில் அடிபம்பு பொருத்தப்பட்டு உள்ளது. இதில் நொச்சிக்குப்பம், ஆயிரம் விளக்கு உள்ளிட்ட கடற்கரையோரம் உள்ள பொதுமக்கள், பம்ப்பில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்கிறார்கள். உப்பில்லாத இந்த தண்ணீரை அவர்கள் குடிக்க, குளிக்க மற்றும் துணி துவைக்க பயன்படுத்து கிறார்கள். இந்நிலையில் மெரினா கடற்கரையோரம் உள்ள போர்வெல் அடி பம்புகளில் இருந்து எடுக்கப்படும் தண்ணீரை குடிக்க வேண்டாம் என்று சென்னை குடிநீர் வாரியம் வேண்டு கோள் விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனர் ஹரிகரன் கூறுகையில், “மெரினா கடற்கரையோரம் உள்ள போர்வெல்களில் இருந்து எடுக்கப்பட்ட தண்ணீர் குடிநீர் வாரியத்தின் பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அந்த தண்ணீர் குடிநீராக பயன்படுத்த ஏற்றதல்ல என்பது தெரிய வந்தது. அதில் குடிநீருக்கான திடப்பொருள் குறைவாக உள்ளது. ஆனால் அந்த தண்ணீரை குளிக்கவும், துணி துவைக்கவும் பயன்படுத்திக் கொள்ள லாம். குடிநீருக்காக பயன்படுத்தப்படும் குழாய்க ளில் விநியோகம் செய்யப்படுகிறது. மெரினா வில் போர்வெல் தண்ணீரை குடிக்க வேண்டாம் என அப்பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிடப்படும்” என்றார்.