tamilnadu

img

டாக்டர் சுனிதி சாலமன் நினைவு கருத்தரங்கு

சென்னை, ஜூன் 26  ஒய்ஆர்ஜி கேர் சார்பில் சென்னையில் சுனிதி சாலமன் நினைவு கருத்தரங்ககு நடை பெற்றது. 

மறைந்த டாக்டர் சுனிதி சாலமனின் நீண்ட பாரம்பரியத்தையும், சுகா தாரப் பாதுகாப்பில் அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளையும் கவுர விக்கும் விதமாக இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது.

 இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், சமூகத் தலைவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கலந்து கொண்டு அவரது மகத்தான பணியை நினைவு கூர்ந்தனர். பொது சுகாதார ஆராய்ச்சியில் தற்போதைய முன்னேற்றங்கள் பற்றி விவாதித்தனர்

இந்த கருத்தரங்கில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பள்ளி பேராசிரியரான டாக்டர் கிரிகோரி லூகாஸ் சிறப்புரை ஆற்றினார். இதைத் தொடர்ந்து, கோவிட்-19 நமக்கு கற்றுக் கொடுத்த பாடங்கள் குறித்த குழு விவாதம் நடைபெற்றது. எதிர்கால தொற்றுநோய்களுடன் தொடர்புடைய நோய் அறிகுறிகளை கண்டறிதல் போன்ற முக்கியமான தலைப்புகளில் மருத்துவ நிபுணர்கள் உரையாற்றினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் டாக்டர் சுனிதி சாலமன் மையம் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. ஒய்ஆர்ஜி கேர், மனிதநேய பராமரிப்பு, மருத்துவ ஆராய்ச்சி மற்றும் சுகாதார கல்வி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. எச்.ஐவி மற்றும் எய்ட்ஸ் பாதிப்பு உள்ள குழந்தைகள் பெண்கள் ஆகியோருக்கு மருத்துவ  மற்றும் பராமரிப்பு சேவைகளையும் வழங்கி வருகிறது.