தமிழகத்தில் 40 தொகுதியில் இந்தியா கூட்டணியின் சார்பில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் இரண்டாவது முறையாக திமுக வேட்பாளர் க.செல்வம் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும் கூட்டணி கட்சியினர் செங்கல்பட்டில் திமுக நகர செயலாளர் நரேந்திரன் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வெடி வெடித்து கொண்டாடினர். மேலும் அண்ணா சிலையில் இருந்து ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தனர். செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.சு.பாரதி அண்ணா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.