இயற்கை வளங்களை பாதுகாக்க மாவட்ட அமர்வு நீதிபதி வேண்டுகோள்!
ராணிப்பேட்டை, ஏப். 19 - உயர்நீதிமன்ற அறிவுறுத்தல்படி வட்ட சட்டப் பணிக்குழு, ஊரக வளர்ச்சி துறை, மாவட்ட நிர்வாகமும் இணைந்து சனிக்கிழ மையன்று (ஏப். 18) ஆற்காடு அடுத்த மேச்சேரி கிராமத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் மாவட்ட அமர்வு நீதிபதி ராதாகிருஷ்ணன் மரம் நடும் பணியை நடுவு செய்து தொடங்கி வைத்தார். தேவையான மரங்களை நாம் நடும்போது வருங்கால சந்ததிக்கு பலன் கிடைக்கும் எல்லாத்தையும் அரசாங்கம் மட்டுமே செய்யும் என்று நினைக்காமல் அனை வரும் மரங்களை பாதுகாக்க முன் வர வேண்டும். அப்படி செயல்படாமல் போனதால் தான் நல்ல காற்றை சுவாசிக்க (ஆக்சிஜன்) காசு கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். எனவே இயற்கையை பாதுகாக்கவும் மரங்களை நடவும் பொது மக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட அமர்வு நீதிபதி ராதாகிருஷ்ணன் பேசினார். தொடர்ந்து பொதுமக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முன்சிஃப் மற்றும் நீதித்துறை சேர்மன் சந்தானம், வருவாய் கோட்டாட்சியர் ராஜராஜன், செயற்பொறியாளர் செந்தில்குமார், ஆற்காடு ஒன்றிய குழு தலைவர் புவ னேஸ்வரி சத்யநாதன், கவுன்சிலர் செந்தாமரை ரஜினி, ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன் இயற்கை ஆர்வலர் நடராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வக்பு வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு
ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாவட்டக்குழு உறுப்பினர் சி.சரவணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் துவக்கி வைத்தும், மாவட்டச் செயலாளர் எஸ்.டி.சங்கரி நிறைவு செய்தும் பேசினார். குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமல் விஜயன், சுரேஷ்குமார்(காங்கிரஸ்), இரா.சிவா (திராவிடர் கழகம்), யூசுப்கான் (முஸ்லிம் லீக்) ஆகியோர் உரையாற்றினர்.
வக்பு சட்ட திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.