tamilnadu

img

ஒருங்கிணைந்த ஊக்க ஊதியம் கேட்டு ஆர்ப்பாட்டம்...

என்எல்சி நிறுவனம் ஒருங்கிணைந்த ஊக்க ஊதிய தொகையை தாமதம் இன்றி உடனடியாக வழங்க வலியுறுத்தியும், முழு தொகையையும் பிடித்தமின்றி வழங்க கோரியும், சிஐடியு சார்பில் மெயின் பஜார் காமராஜர் சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு சங்கத்தின் தலைவர் டி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.பொதுசெயலாளர் எஸ்.திருஅரசு,பொருளாளர் எம்.சீனிவாசன், பிபிஎம் நகர செயலாளர் ஆர்.பாலமுருகன், நிர்வாகிகள் எஸ்.ஆரோக்கியதாஸ், எம்.சந்திரன், வி.குமார், அலுவலக செயலாளர் எம்.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.