கள்ளச்சாராயத்தை தடுக்க தனி சட்டம் இயற்ற வேண்டும், கள்ளச்சாராய வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்டம், ஆரணியில் ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (ஜூன் 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சசிகலா தலைமை தாங்கினார். இதில் மாதர் சங்கத்தின் மாவட்ட தலைவர் இ.மோகனா, மாவட்ட செயலாளர் ஏ.பத்மா பொன்னேரி பகுதி குழு உறுப்பினர் தேவி, நாகலட்சுமி உட்பட பலர் பேசினர்.