வக்பு திருத்த மசோதாவை முழுமையாக திரும்ப பெற வேண்டும், வழிபாட்டு தலங்கள் பாதுகாப்புச் சட்டம் - 1991ஐ முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியும், உ.பி. மாநிலம் சம்பலில் நடைபெற்ற படுகொலையை கண்டித்தும் வெள்ளியன்று (டிச.6) வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத் தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ் பேசினார். சிபிஐ மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ஏ.கோபண்ணா, திராவிடர் கழகத் துணைப் பொதுச்செயலாளர் செ.ம.மதிவதனி உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.