பிஎஸ்என்எல் ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொலைத் தொடர்பு துறை நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு மாதங்களாக சம்பளம் வழங்காததைக் கண்டித்தும், பிஎஸ்என்எல் நிறுவனத்தை புத்தாக்கம் செய்து பாதுகாக்க வலியுறுத்தியும் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தமிழ்நாடு தொலைத் தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் கடலூர், வேலூர், புதுச்சேரியில் குடும்பத்துடன் தர்ணா போராட்டம் நடத்தினர்.