tamilnadu

img

உயிருக்கு ஆபத்து: காவல்துறையில் தீபா புகார்...

சென்னை;
என் உயிருக்கு இரண்டு பேரால் ஆபத்து உள்ளது, இவர்களை பற்றி பலமுறை புகார் அளித்தும் காவல்துறை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று சென்னை காவல் துறை ஆணையருக்கு முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வாட்ஸ் அப் ஆடியோ மூலம் புகார் அனுப்பி உள்ளார்.ஈசிஆர். ராமச்சந்திரன் மற்றும் ராஜா ஆகிய இரண்டு பேர் தனது பெயரில் பலரிடம் பணம் வசூல் செய்து தன்னிடம் கொடுத்ததாக கூறி உள்ளார்கள், எனவே எனது உயிருக்கும், உடமைக்கும், எனது கணவருக்கும் இவர்களால் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது என ஜெ. தீபா புகார் கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் ஜெ.தீபா மற்றும் அவரது அண்ணன் ஜெ. தீபக் ஆகியோர் தான் என சென்னை உயர் நீதிமன்றமே அறிவித்துவிட்டது. அவர்களுக்கு ஜெயலலிதாவின் சொத்துக்கள் திரும்ப அளிக்கப்பட உள்ளது. போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாறுவதால் அதற்கான தொகையும் இவர்களுக்குத்தான் தரப்பட உள்ளது.இந்நிலையில் ஜெ. தீபா சென்னை  வாட்ஸ் அப் ஆடியோ மூலம் நேற்று பரபரப்பு புகார் ஒன்றை அனுப்பினார். அதில் அவர் “அரசியலில் நான் முழு வீச்சில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு கூட்டம் சேர்ந்து என்னை ஏமாற்றி கொள்ளையடித்து வந்தது.குறிப்பாக, தனக்கு அறிமுகமே இல்லாத ராஜா மற்றும் ஈசிஆர்.ராமச்சந்திரன் என்ற இருவர் வியாபாரி என்று தங்களை சொல்லிக் கொண்டு என்னுடைய பேரவையில் இருந்து வந்தார்கள் தனக்கு இவர்களால் ஆபத்து ஏற்பட்ட போது, இவர்கள் மீது பலமுறை நான் புகார் அளித்தும் காவல்துறை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.ஈசிஆர். ராமச்சந்திரன் மற்றும் ராஜா என்ற இந்த இரண்டு பேரும் பலரிடம் பணம் வசூல் செய்து அதை எண்ணிடம் கொடுத்ததாக கூறியிருக்கிறார்கள்.எனது உயிருக்கும், உடமைக்கும், எனது கணவருக்கும் ஆபத்தான சூழல் ஏற்பட்டுள் ளது. வீட்டிற்குள்ளே அத்துமீறி அந்த 
இரண்டு பேரும் வீடு புகுந்து மிரட்டினர். இவர் கள் இருவரும் என்னை பின்தொடர்கிறார்கள். இதனால், நான் அச்சம் அடைந்துள்ளேன். எனது உடல்நிலை தற்போது பாதிப்படைந்திருக்கிறது-. எனக்கு மன உளைச்சலும், ஆபத்தும் ஏற்பட்டுள்ளது. எனவே, காவல் ஆணையர் இந்த புகாரின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜெ.தீபா கூறியுள்ளார்.