கேரள மாநிலம், வயநாட்டில் எதிர்பாராமல் பெய்த அதிகனமழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் 31.07.2024 அன்று கேரள முத லமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10 லட்சம் அனுப்பி வைக்கப்பட்டது.
கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளான கேரள மக்களுக்கு உதவிடுமாறு, தாராளமாக நிதி வழங்கிட வேண்டுமெனவும், கட்சியின் மத்தியக்குழு, நாடு முழுவதுமுள்ள கட்சி உறுப்பினர்கள், பொதுமக்களுக்கு அறைகூவல் விடுத்தது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பி னர்கள், ஆதரவாளர்கள், நண்பர்கள், பொதுமக்கள் வழங்கிய ‘35 லட்சத்து 97 ஆயிரத்து 611 ரூபாய்’ (ரூ. 35,97,611), வியாழனன்று (05.09.2024) கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் மத்தியக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.