சென்னை, பிப். 13 - தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் நலவாரிய சட்டத்தை மீண்டும் செயல்படுத்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் 11.02.2024 அன்று கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 10 லட்சத்திற்கும் மேற்பட்ட விவ சாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இவர் களுக்கு மிகக் குறைவான நாட்களே வேலை கிடைக்கிறது. விவசாயக் கூலி வேலைகளை மட்டுமே நம்பியிருக்கும் இம்மக்கள், போதிய வருமானமின்றியும், கடுமையான விலை உயர்வின் காரண மாகவும் வாழ்வாதாரம் இழந்து தவிக் கின்றனர். 1998-இல் திமுக ஆட்சிக்காலத்தில் கலைஞர் அவர்கள் விவசாயிகள் - விவசா யத் தொழிலாளர் நலவாரியத்தை அமைத் தார். ஆனால், 2001-இல் ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு அதனை ‘உழவர் பாது காப்புத் திட்டம்’ என்று மாற்றியது.
அதன் பிறகு மீண்டும் திமுக ஆட்சி பொறுப் பேற்ற பிறகு, டாக்டர் கலைஞர் அவர் களால் அமைக்கப்பட்ட நல வாரியம் தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் - விவசாயிகள் (சமூக பாதுகாப்பு மற்றும் நலன்) சட்டம் 2006-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. இச்சட்டத்தை நடைமுறைப் படுத்த மாநில அரசின் வருவாய்த்துறை அமைச்சரை தலைவராக கொண்டு அரசுத் தரப்பு பிரதிநிதிகள் 6 பேர், அரசு சாரா பிரதிநிதிகள் 8 பேர் கொண்ட மாநில வாரியம் உருவாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி விவசாயத் தொழி லாளர்களுக்கு பல்வேறு நிவாரண உதவி கள் வழங்கப்பட்டன.
2011-இல் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தபிறகு சட்ட அந்தஸ்துடன் செயல் பட்ட இந்த நலவாரியத்தை முடக்கியது. தங்களுடைய ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட உழவர் பாதுகாப்பு திட்டத்தை யே மீண்டும் கொண்டு வந்தது. விவசா யத் தொழிலாளர்கள், விவசாயிகள் சமூ கப் பாதுகாப்பு திட்டத்தை அமலாக்கு வதை நிறுத்தி வைத்தது. மேலும், போதிய நிதி ஒதுக்காமலும் திட்டத்தைக் கிடப்பில் போட்டது. இதனால், விவசாயத் தொழிலா ளர்கள், கிராமப்புற உழைப்பாளிகள் சொல் லொண்ணா துயரத்திற்கு உள்ளாகி யுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு முதல்வர் அவர் கள், 2006-இல் டாக்டர் கலைஞர் அவர் களால் கொண்டுவரப்பட்ட “தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள், விவசாயி கள் (சமூகப் பாதுகாப்பு மற்றும் நலம்) சட்டத்தை” மீண்டும் நிறைவேற்றி விவ சாயத் தொழிலாளர்கள் மற்றும் கிராமப் புற உழைப்பாளிகளின் வாழ்வாதா ரத்தை பாதுகாக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.