‘நீட்’ தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதோடு, இத்தேர்வை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி வெள்ளியன்று (ஜூன் 21) எம்ஜிஆர் நகரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல்வராயன், பகுதிக்குழு உறுப்பினர் ராஜேஷ் மற்றும் எஸ்.ஆனந்தகுமார் (மாணவர் சங்கம்), ஏ.மணிமாறன் (வாலிபர் சங்கம்), டி.விஜயகுமாரி (மாதர் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.