tamilnadu

img

கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா....

சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழகத்தை தொடர்ந்து கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும்,  கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கயாக இருக்கும்படி மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கே.எஸ். அழகிரி சிகிச்சிக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.எனவே, அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளது.

;