tamilnadu

தலைமைச் செயலக ஊழியர்கள் 56 பேருக்கு கொரோனா பாதிப்பு...

சென்னை:
கடந்த மூன்று நாள்களில் தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப் பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும் அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்வதற்காக 100 விழுக்காடு பணியாளர்களும் தலைமைச் செயலகத்துக்கு தொடர்ந்து பணிக்கு வருகின்றனர்.இச்செயலகத்துக்கு அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், காவலர்கள் உள்பட பலரும் தினமும் பணிக்கு வருகின்றனர். மேலும் 1,500 செயலக பணியாளர்களில் இதுவரை 256 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த மூன்று நாள்களில் மட்டும் தலைமைச் செயலக பணியாளர்கள் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பணியாளர்களிடையே பதற்றம் நிலவுகிறது.மேலும் இந்தக் கொரோனா தொற்று, தங்கள் குடும்பத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் பணியாளர்கள் உள்ளனர்.தமிழ்நாடு அரசு சார்பில் உடல் பரிசோதனை வெப்பமானி, கிருமிநாசினி, தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இருப்பினும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.இது குறித்து ஏற்கனவே தலைமைச் செயலக சங்கம் சார்பில் 50 விழுக்காடு பணியாளர்கள் கொண்டு இயங்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கைவிடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரிசோதனை அவசியம்
காய்ச்சல், அதிக வெப்பநிலை, சளி, இருமல் அல்லது ஆக்ஸிஜன் செறிவு குறைதல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட எந்தவொரு அலுவலரும் பரிசோதனை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.சென்னை தலைமைச் செயலக பணியாளர்களுக்கு வைரஸ் தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக, செந்தில்குமார் ஐ.ஏ.எஸ்., அரசாங்கத்தின் முதன்மை செயலாளர், கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் (கோவிட்-19) குறித்து அனைத்து செயலாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார்.இது குறித்து கடிதத்தில், “தலைமைச் செயலகத்தில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக (கோவிட்-19) பொதுத் துறையால் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.மேலும் அனைத்து ஊழியர்களும் செயலக பார்வையாளர்களும் வெப்ப ஸ்கேனிங்கிற்கு உட்படுத்தப்பட்டு, கிருமி நாசினி கொண்டு கைக்களை சுத்தம் செய்யப்படுகிறது.பிரதான கட்டடம் மற்றும் நாமக்கல் கவிஞர் மாளிகை நுழைவாயில்களில் சுத்திகரிப்பு மருந்துகள் மேலும், கிருமி நாசினி சுத்திகரிப்பு, மருந்தகங்கள், செயலக மருந்தகம், ஏடிஎம் போன்றவற்றை இணைக்கும் அனைத்து பொதுவான இடங்களிலும் வழங்கப்படுகின்றன.

தற்போது, ​​தலைமைச்செயலகத்தில் கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதை கவனத்தில் கொண்டு வந்துள்ளது.எனவே, செயலகத்தின் அனைத்து பிரிவுகளும் ஆக்ஸிஜன் அளவை சரிபார்க்க தேவையான ஆக்சிமீட்டர்கள் மற்றும் தினசரி அடிப்படையில் தங்கள் துறைகளின் பணியாளர்களின் வெப்பநிலையை சரிபார்க்க வெப்ப ஸ்கேனர்களை வாங்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றன.மேலும், காய்ச்சல், அதிக வெப்பநிலை, சளி, இருமல் அல்லது ஆக்ஸிஜன் செறிவு குறைதல் போன்ற அறிகுறிகளைக் கொண்ட எந்தவொரு அதிகாரியும் பரிசோதனை மற்றும் மேலதிக மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.ஒவ்வொரு துறையின் துணை செயலாளர் அரசாங்கத்தின் துணை செயலாளர் இதற்கு பொறுப்பாக இருப்பார்கள், அவர் கள் அதை தினசரி அடிப்படையில் கண் காணிக்க வேண்டும்” என்று கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.