tamilnadu

img

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து: அமெரிக்க அனுமதிக்கு பிஃபிசர் விண்ணப்பம்

புதுதில்லி:
அமெரிக்காவில், தங்கள் கொரோனா தடுப்புமருந்துக்கு அவசர அனுமதிகேட்டு பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் வெள்ளிக்கிழமையன்று விண்ணப்பித்து இருக்கின்றன.

இந்த மருந்தை பயன்பாட்டுக்கு அனுமதிப்பது பாதுகாப்பானது தானா? என்பதை தீர்மானிப்பது, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கழகம் (எஃப்.டி.ஏ) என்ற அமைப்பின் பணி.இந்த எஃப்.டி.ஏ அமைப்பு, இந்த மருந்தைக் குறித்து முழுமையாக படிக்கஎவ்வளவு காலம் எடுத்துக் கொள்ளும் என்று தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், இந்த மருந்தை, அமெரிக்க அரசு, வரும் டிசம்பர் மாதத்தின் முதல் பாதிக்குள் அனுமதிக்கலாம்.இந்த மருந்தின் மேம்பட்ட சோதனையில் இருந்துகிடைத்த தரவுகள், இந்த மருந்து, 65 வயதுக்கு மேற்பட்ட 94 சதவீதம் பேரைப் பாதுகாக்கிறது எனக் கூறுகின்றன.

பிரிட்டன், ஏற்கனவே இந்த மருந்தை 40 மில்லியன்டோஸ் முன் கூட்டி ஆர்டர் செய்து இருக்கிறது. அதற்குஇந்த ஆண்டின் இறுதிக்குள் 10 மில்லியன் டோஸ் மருந்துவந்து சேரும்.அமெரிக்காவில், கொரோனா தடுப்பு மருந்துக்கான தேவையை, கடந்த வியாழக்கிழமை, கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையே வெளிப்படுத்துகிறது. கடந்த ஜூன் மாதத்துக்குப் பிறகு, ஒரே நாளில் 2,000 பேருக்கு மேல் இறந்துஇருக்கிறார்கள்.அமெரிக்காவின் எஃப்.டி.ஏ அனுமதி அடுத்த மாதம்முதல் பாதியில் வந்தால், அடுத்த சில மணி நேரங்களிலேயே, பிஃபிசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தடுப்பு மருந்துகளை விநியோகிக்கத் தயாராக இருக்கும் என, ப்ஃபிசர் நிறுவனத் தரப்பே சொல்லி இருக்கிறது.கோவிட் 19 வைரஸின்ஜெனடிக் கோட்விவரிக்கப்பட்ட 10 மாதங்களில், ஒரு தடுப்பூசி விவகாரத்தில், இத்தனை வேகமான மேம்பாடு என்பது குறிப்பிடத்தக்கது.

சராசரியாக, அமெரிக்காவில் ஒரு தடுப்பு மருந்துஅனுமதிக்கப்பட 8 ஆண்டுகள் ஆகலாம்.கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டுக்கு விண்ணப்பிப்பது, உலகுக்கு, கொரோனா தடுப்பு மருந்து கொடுக்கும் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என பிஃபிசர் சி.இ.ஓஆல்பர் போர்லா கூறியுள்ளார்.ஆரம்பத்தில் மருந்துகள் பற்றாக்குறை இருக்கலாம், இருப்பினும், அமெரிக்காவின் சிடிசிபி அமைப்பினர்தான், யாருக்கு முதலில் மருந்து கொடுக்க வேண்டும் என தீர்மானிப்பார்கள்.இந்த ஆண்டுக்குள், ஐரோப்பிய ஒன்றியம் வேகமாக செயல்படலாம் என, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் சொல்லி இருக்கிறார்.ஆனால் சில எச்சரிக்கைகள் உள்ளன என்று, லண்டன்ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் மருந்தகவியல் நோயியல் பேராசிரியர் ஸ்டீபன் எவன்ஸ் சொல்கிறார். மேலும் எஃப்.டி.ஏ மற்றும்ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (ஈ.எம்.ஏ) ஆகிய இரண்டு அமைப்பும் “மிகவும்கவனமாக கொரோனா தடுப்பு மருந்தை மதிப்பீடு செய்யும்” என்கிறார்.இந்த தடுப்பூசி இன்னும்பரவலான பயன்பாட்டிலிருந்து வெகு தொலைவில் இருக்கிறது. ஏனெனில் இது முன்னர் அங்கீகரிக்கப்படாத ஒரு சோதனை தொழில்நுட்பத்தின் அடிப்படையை பின்பற்றுகிறது என்று பிபிசி சுகாதார நிருபர் நவோமி கிரிம்லி கூறுகிறார்.

;