tamilnadu

img

அக்.10ல் தமிழகம் முழுவதும் ஒப்பந்த ஊழியர்கள் மறியல்

மின்ஊழியர்  மத்திய  அமைப்பின்  பொதுச்  செயலாளர்   எஸ்.ராஜேந்திரன்  தகவல்

சென்னை, செப். 6 - மின்வாரியமே ஒப்பந்த ஊழியர் களை பட்டியலிட்டு தினக்கூலியாக 380 ரூபாயைநேரடியாக வழங்கு வதோடு படிப்படியாக அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும். இதனை வலியுறுத்தி அக்.10 அன்று மாவட்ட தலைமை பொறியாளர் அலு வலகங்கள் முன்பு மறியல் நடைபெற  உள்ளதாக தமிழ்நாடு மின் ஊழி யர் மத்திய அமைப்பின் பொதுச்செய லாளர் எஸ்.ராஜேந்திரன் தெரி வித்தார். 40 ஆயிரம் காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும், 2003க்கு பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை அமல்  படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று (செப்.6) தமிழகம் முழு வதும் மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு மின் ஊழி யர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். மத்திய அமைப்பின் மாநில மாநாடு விடுத்த அறைகூவலை ஏற்று நடைபெற்ற இந்தப்போராட்டத்தல், வாரியம் அறிவித்தபடி ஐடிஐ படித்த 2 ஆயிரத்து 900 பேரை கள உதவி யாளர்களாக பணி நியமனம் செய்ய  வேண்டும், கேங்மேன் என்ற மோசடி  பதவியை ரத்து செய்து கள உதவி யாளர் என பெயர் மாற்ற வேண்டும், ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்தப்போராட்டத்தின் ஒருபகுதி யாக சென்னை (கே.கே.நகர்)  தெற்கு மேற்பார்வை பொறியாளர்  அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில் மத்தியஅமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ராஜேந்தி ரன் கலந்து கொண்டார். அங்கு செய்தி யாளர்களிடம் பேசிய அவர், “மின் ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வருகிறது. இது தொடருமானால் அடுத்தடுத்து வலுவான போராட்டம் நடைபெறும்” என்றார்.

“மின்வாரியத்தை பாதுகாக்க கோரியும், தரமான, மலிவான மின்சா ரம் வழங்க வலியுறுத்தியும் நவம்பர்  மாதம் 9 மண்டங்களில் கருத்தரங்கு கள் நடைபெறுகிறது. இதில் விவ சாய அமைப்புகளின் தலைவர்கள், சிறு, குறு தொழில் புரிவோர் பங்கேற்பார்கள்” என்றும் அவர் கூறினார். இப்போராட்டத்திற்கு தென் சென்னை கிளை-1ன் தலைவர் கே.தரணி தலைமை தாங்கினார். மாநலப் பொருளாளர் எம்.வெங்க டேசன், சிஐடியு தென்சென்னை மாவட்ட பொருளாளர் ஏ.பழனி, மத்திய அமைப்பின் மாநில இணைச் செயலாளர் ஏ.முருகானந்தம், கிளை பொருளாளர் டி.பண்டாரம்பிள்ளை, கோட்டச் செயலாளர்கள் வி.விஜய பாஸ்கர் (போரூர்), பி.சோமசுந்தரம் (கிண்டி), எஸ்.குமார் (கே.கே.நகர்), பொறியாளர் அமைப்பின் திட்டச் செயலாளர் ஆதன் இளங்கீரன், கே.கே.நகர் கோட்டத் தலைவர் ஜெ.மயில்வேலன் உள்ளிட்டோர் பேசினர்.