சென்னை, மே 18- ரயில்வே கேண்டீன் தொழிலாளர்களை ஒருங்கிணைத்த தோழர் கே.சிவசங்கரன் மற்றும் செயல்வீரர் எஸ்.விஸ்வநாதன் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் பெரம்பூர் கேரேஜ் ஒர்க்ஸ் அருகே சனிக்கிழமை (மே 18) நடைபெற்றது.
அகில இந்திய ரயில்வே கேன்டீன் தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் கே.சங்கரன் அண்மை யில் கேரளாவில் உள்ள பாலக்காட்டில் காலமானார். ரயில்வே கேண்டின் தொழி லாளியாக தனது தொழிற்சங்க பயணத்தை துவக்கிய சிவசங்கரன் இளமையிலேயே தன்னை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டார்.
சமூக மாற்றத்திற்கான கள போராட்டத் தில் சமரசமற்ற போராளியாக செயல்பட்ட தோடு எஸ்ஆர்இடபிள்யூசி அமைப்பின் முன்னணித் தலைவராக விளங்கினார். கேண்டீன் தொழிலாளர்களுக்கு பணி நிரந்தரம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு பெற்றுத்தர பாடுபட்டவர் என நிகழ்ச்சி யில் பங்கேற்ற தலைவர்கள் புகழாரம் சூட்டினார்.
இதில் எஸ்ஆர்இடபுள்யூசி தலைவர் வி.வெங்கடசாமி, பொதுச்செயலாளர் வி.சாந்தகுமார், துணைத் தலைவர்கள் கே.மோகன், ஜே.பக்தவச்சலம், பி.வீர பத்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கொளத்தூர் பகுதிச் செயலாளர் பா.ஹேமாவதி, முன்னாள் கவுன்சிலர் பா.தேவி அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் ஷினு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.