விவசாய தொழிலாளர் இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் ஜி.மணி 3வது ஆண்டு நினைவு நாளையொட்டி புதனன்று (ஜூன் 5) பொன்னேரியில் உள்ள அவரது நினை விடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வி.அமிர்தலிங்கம், மாவட்ட தலைவர் இ.தவமணி, மாவட்ட செயலாளர் அ.து.கோதண்டன், பொருளாளர் என்.கங்காதரன், மாவட்ட துணைத் தலைவர் இ.ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலாளர்கள் டி.சரளா, பி.அருள், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.பத்மா, சிபிஎம் மாவட்ட செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.பன்னீர்செல்வம், ஞாயிறு ஊராட்சி மன்ற தலைவர் ஜி.வி.எல்லையன், சிஐடியு நிர்வாகிகள் இ.ஜெயவேல், எம்.நாகராஜ், தோழர் ஜி.மணியின் மகன் தினேஷ் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.