tamilnadu

img

பட்டியலினத்தவருக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பு அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மீது புகார்

பட்டியலினத்தவருக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பு
அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் மீது புகார்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பட்டியலினத்தை சேர்ந்த மண மக்களுக்கு திருமணம் செய்து வைக்க மறுப்பு தெரிவித்தால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் தெரிவித்தனர். திருவண்ணாமலை-போளூர் சாலை யில் வசிப்பவர் இளையராஜா. இவர் திரு வண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். இந்த மனுவின் விவரம் வருமாறு: தனது சகோதரர் ராஜவேலு மகன் ஜெனி ராஜ். பயிற்சி மருத்துவராக பணிபுரியும் ஜெனித் ராஜுக்கும் திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் கிராமத்தில் வசிக்கும் அவரது உறவினர் வீட்டைச் சேர்ந்த பிரீத்தி என்ற பெண்ணுக்கும் திரு மணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். திரு வண்ணாமலை அண்ணாமலையார் கோயி லில் மார்ச் 10 ஆம் தேதி திருமணம் செய்வது எனவும் திட்டமிட்டுள்ளனர்.  அதற்காக திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் திருமணம் செய்வ தற்கான விண்ணப்பம் பெறப்பட்டு அதை உரிய முறையில் பூர்த்தி செய்து, அதில் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்து ஒப்படைத்துள்ளனர். ஆனால் மணமகன் பெயர் மற்றும் உறவினர் பெயர் கிருத்துவ பெயர்களாக உள்ளதால் அண்ணாமலையார் கோயிலில் திருமணம் செய்ய அனுமதிக்க முடியாது என இணை ஆணையர் கூறி அனுமதி மறுத்து விட்டார். எனவே, தலித் மணமக்களுக்கு அண்ணா மலையார் கோயிலில் திருமணம் செய்ய அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எஸ். ராமதாஸ், வழக்கறிஞர் எஸ். அபிராமன், சிபிஎம் மாநகர செயலாளர் எம். பிரகலநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.