தோழர் கேஎஸ்பி நினைவு தினம் அனுசரிப்பு
சுதந்திர போராட்ட வீரரும் கைத்தறி நெசவாளர்களின் மகத்தான தலைவருமான தோழர் கே.எஸ்.பார்த்தசாரதியின் 35ஆம் ஆண்டு நினைவு தின கூட்டம் சிபிஎம் காஞ்சிபுரம் மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் கே.நேரு தலைமையில் நடைபெற்றது. இதில், டி.ஸ்ரீதர், எஸ்.பழனி, வி.சிவப்பிரகாசம், மூத்த உறுப்பினர் ஜி.வசந்தா, கைத்தறி மாவட்ட செயலாளர் கே.ஜீவா, தவிச மாவட்ட செயலாளர் சாரங்கன், நகரக்குழு உறுப்பினர்கள் ஜி.எஸ்.வெங்கடேசன், எம்.சூரியாபாரதி, எல்.லட்சுமிபதி, எம்.வெங்கடேசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.