tamilnadu

கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் முதல்வர் நாராயணசாமி ஆய்வு

புதுச்சேரி, ஜூன் 4- கொரோனா தொற்று நோய் புதுச்சேரி யில் கடந்த ஒரு வாரகாலமாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு மண்டல பகுதிக்குள்  வசிக்கும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து அறிந்த முதல்வர் நரா யணசாமி மணவெளி தொகுதிக்குட்பட்ட அபி ஷேகப்பாக்கம், பூரணாங்குப்பம் ஆகிய கட்டுப்பாட்டு மண்டல பகுதியில் திடீர் ஆய்வு  மேற்கொண்டார்.  அப்போது அப்பகுதியில் சுகாதாரத் துறை, காவல்துறை அதிகாரிகளை சந்தித்து  என்ன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று முதல்வர் கேட்டறிந்தார். அப்போது தொகுதி  சட்டமன்ற உறுப்பினரான அனந்தராமன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடன்  இருந்தனர்.