சென்னை, ஜூலை 13- உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் படி காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி யும், நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் ஜூலை 16 அன்று காவிரி டெல்டா மாவட்டங் களில் தமிழ்நாடு விவசாயிகள் சங் கங்கள் ரயில் மறியல் போராட்டங் கள் நடத்திட முடிவு செய்துள்ளன.
தமிழ்நாடு விவசாயிகள் சங் கத்தின் மாநில பொதுச்செயலாளர் சாமி. நடராஜன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கை:
காவிரி டெல்டா மாவட்டங்க ளில் சாகுபடிக்காக மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படும். இந்தாண்டு மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல் லாததாலும், கடந்தாண்டு கர்நாடக அரசு, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப் பின்படி காவிரியில் தண்ணீர் திறக் காமல் சுமார் 99 டிஎம்சி தண்ணீர் நிலுவையில் உள்ளதாலும், இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்தாண்டு ஜூன் மாதத்தில் 9.19 டிஎம்சி, ஜூலை மாதத்தில் 31.24 டிஎம்சி தண்ணீர் கர்நாடகா வழங்க வேண்டும். ஆனால் தற் போது வரை சுமார் 5 டிஎம்சி தண் ணீர் தான் கர்நாடகம் திறந்துள் ளது. இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலைக்கு விவ சாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். தற்போது கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் கபினி அணை நிரம்பி உள்ளது. கிருஷ்ணராஜ சாகர் அணை உட்பட அனைத்து அணைகளிலும் 85 சதவீதம் தண் ணீர் தேக்கப்பட்டுள்ளது.
கர்நாடக அரசுக்கு கண்டனம்
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூடிய காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில் கர்நாடகா அரசு காவிரியில் தினந் தோறும் ஒரு டிஎம்சி தண்ணீர் தமி ழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.
இந்த பரிந்துரையை கர்நாடக அரசு ஏற்க முடியாது என்றும், காவி ரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று அம்மாநில முதலமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள் ளது வன்மையான கண்டனத்துக் குரியது. கர்நாடக மாநில அரசின் இந்த அணுகுமுறை இருமாநில நல்லுறவை கெடுத்து, பதற்றமான நிலைமையை ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கும் இது எதிரானது. டெல்டா மாவட் டங்களில் ஒரு போக சம்பா சாகுபடி யையாவது செய்யலாம் என காத்தி ருந்த விவசாயிகளுக்கு இது பேர திர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசு
தொடர்ந்து கர்நாடகத்தில் ஆட்சியில் உள்ள எந்த அரசாக இருந்தாலும் காவிரியில் தண்ணீர் திறப்பதில் நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்புகளை மதிக்காத போக்கை கடைபிடிக்கின்றனர். இவற்றை கண்காணிக்க வேண்டிய காவிரி மேலாண்மை ஆணையம் வெறும் உத்தரவுகளை மட்டுமே போடும் அமைப்பாக உள்ளது. ஒன்றிய பாஜக அரசு தமிழக விவசாயிகள் நலனைப்பற்றி கவலைப்படாமல் மௌனமாக வேடிக்கை பார்ப்பது கண்டிக்கத்தக்கது.
எனவே, காவிரியில் உச்சநீதி மன்ற இறுதித் தீர்ப்பின்படி தண்ணீர் திறக்க வலியுறுத்தியும். வேடிக்கை பார்க்கும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்தும் எதிர்வரும் 16.07.2024 அன்று காவிரி டெல்டா மாவட்டங் கள் முழுவதும் ரயில் மறியல் போராட்டம் இரண்டு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கங்களின் சார்பில் நடத்துவது என்று தீர்மானித்துள் ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைத்துக் கட்சி கூட்டம் நடத்துக!
இந்த ரயில் மறியல் போராட்டத் தில் அனைத்து விவசாயிகளும், பொதுமக்களும் அரசியல் கட்சி களை சார்ந்தவர்களும் பங்கேற்று ஆதரவு கொடுத்திட வேண்டுகி றோம். மேலும் தமிழ்நாடு அரசு காவிரி டெல்டா மாவட்ட விவசாயி களையும், விவசாயத்தையும் பாது காக்கும் வகையில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். அத்து டன் காவிரி டெல்டா மாவட்டங்க ளில் ஏற்பட்டுள்ள பதற்றமான நிலை மை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி, அனைத்து விவசாயிகள் சங்க கூட்டத்தை நடத்திட வேண்டு மென்று தமிழ்நாடு அரசை வற் புறுத்திக் கேட்டுக்கொள்கிறோம் என்று அவர்கள் தங்கள் அறிக்கை யில் கூறியுள்ளனர்.