tamilnadu

மனைவியின் படத்திற்கு மாலை வாங்க சென்ற கணவர் சாலை விபத்தில் மரணம்

ம்பத்தூர், ஏப்.21- மாங்காடு அருகே சாலை விபத்தில் முதிய வர் ஒருவர் உயிரிழந்தார். மாங்காடு அருகே கோவூர் பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (70).

இவர் சனிக் கிழமை  வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத் தில் கடை வீதிக்கு புறப்பட்டார். இவர் கோவூர் பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்த போது, பாரிமுனையில் இருந்து குன்றத்தூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து (தடம் எண் 88) அவரது இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த சுந்தரமூர்த்தி சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதனைப் பார்த்த ஓட்டுநர் பேருந்தை சாலையில் விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆவடி போக்குவரத்து புலனாய்வு  காவல் துறையினர் சுந்தரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  மேலும் காவல் துறை யினர் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.  விசாரணையில் சுந்தர மூர்த்தி, உயிரிழந்த மனைவியின் புகைப் படத்திற்கு மாலை வாங்க கடை வீதிக்கு சென்ற போது சாலை விபத்தில் உயிரிழந்தது தெரியவந்தது.