tamilnadu

வார இறுதி நாட்களில் கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து

சென்னை, மே 20- சென்னை கோயம்பேடு பேருந்து நிலைய த்திலிருந்து வெள்ளி, சனி ஆகிய வார இறுதி  நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு பேருந்துகள் இயக்க ப்படும் என போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது:- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மூலம் கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு பேருந்து கள் தற்போது இயக்கப்படுகிறது. குறிப்பாக திருவண்ணாமலை செல்லும் பயணிகள் பெரும்பாலானவர்கள் கோயம் பேடு மார்க்கெட் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி களில் பணி செய்து வருவதால் அவர்கள் திரு வண்ணாமலை தட பேருந்துகள் கோயம் பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து மே 23 முதல் திரு வண்ணாமலைக்கு, சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தினசரி பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக் கப்பட்டது.  அவற்றில் தற்போது மாற்றம் செய்யப் பட்டு, வரும் 24ஆம் தேதி முதல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பரிட் சார்த்த முறையில் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து காஞ்சி புரம், வந்தவாசி வழியாக இயக்கப்பட்டு வரும் பேருந்துகளில் கூடுதல் சிறப்பு பேருந் துகளும், ஆற்காடு, ஆரணி வழியாக திரு வண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;