tamilnadu

img

காலத்தை வென்றவர்கள்

இந்து சமூகத்தைப் பொருத்தமட்டில் சாதி என்ற கருத்தானது ஆரம்பத்திலிருந்தே வர்க்க ஒடுக்குமுறையாளர்களின் ஓர் ஆயுதமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அதன் பின்னர் ‘கீதை’ என்பது நால் வருண முறையைக் குறித்து பேசுகிறது. “இந்த வருணங்கள் அனைத்தும் என்னால் உருவாக்கப்பட்டவை” என்று கிருஷ்ணர் சொன்னதாகக் கூறப்படுகிறது. அந்த  கடவுள்  அனைத்து சாதிகளையும் உருவாக்கு வதற்காக இந்த துரதிருஷ்டம் பிடித்த நாட்டை மட்டும் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டு மென்பது எனக்குப் புரியவில்லை. உலகில் உள்ள இதர நாடுகளை ஏன் அவர் தேர்ந்தெடுக்கவில்லை? ரஷ்யாவையோ, அமெரிக்காவையோ இங்கிலாந்தையோ அல்லது சீனாவையோ இதற்காக ஏன் தேர்ந்தெடுக்கவில்லை?

ஆகவே, இந்த நாட்டின் சாதியப் பிரிவினை என்பதை இந்த நாட்டின் சொத்துடமை  வர்க்கம் உழைப்பாளி மக்கள் மீது ஒடுக்குமுறையைப் புரிவதற்காகவே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. இந்த சமூக இயலாமை என்பது, இந்நாட்டில் ஒடுக்குமுறை யாளர் கரங்களில் மிகவும் பயனுள்ள ஆயுதமாகவே இருந்து வருகிறது. இந்த நாட்டின் வலுவடைந்துள்ள சொத்துடமை வர்க்கங்கள் உழைப்பாளி மக்களை சாதியால் பிளவுப் படுத்தி அவர்களுடைய ஜனநாயக வளர்ச்சியை தடுத்துக் கொண்டு இருக்கிறது.

- பி.ராமமூர்த்தி -