tamilnadu

தொகுதி பங்கீடு வெற்றிகரமாக நிறைவு கம்பீரமாக களமிறங்கிய திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி

சென்னை, மார்ச் 18 - மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு ஏப்ரல் 19 அன்று தொடங்குகிறது. தமிழ்நாட்டில் உள்ள 39 மற்றும் புதுச்சேரி யில் உள்ள ஒரு தொகுதிக்கும் ஒரே கட்ட மாக ஏப்.19 அன்று தேர்தல் நடைபெறு கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 அன்று துவங்குகிறது.

 இந்த நிலையில், பாஜக அரசை வீழ்த்த, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த கூட்டணி நாடு முழுவதும் தேர்தல் களத்தில் இறங்கி யுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியது.

தொகுதிப் பங்கீடு, திங்களன்று வெற்றிகரமாக நிறைவு பெற்றது. காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் அறிவிப்பு திங்களன்று (மார்ச் 18) பகல் 1 மணிக்கு சென்னை அறிவாலயத்திற்கு வருகை தந்த காங்கிரஸ் தலைவர்கள் கு.செல்வப்பெருந்தகை, ராஜேஷ்குமார், ரூபி ஆர். மனோகரன், மூத்தத் தலை வர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்ளிட் டோர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  இதையடுத்து, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக-தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியும் மற்றத் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடுவது தொடர்பாக ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, காங்கிரஸ் போட்டியிடும் பத்து தொகுதிகள் எவை என்பது குறித்து தீர்மானிக்கப்பட்டது.

இதில் உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், கு.செல்வப் பெருந்தகை இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.  இதைத்தொடர்ந்து செய்தியாளர்களி டம் பேசிய கு.செல்வப்பெருந்தகை, காங்கிரஸ் கட்சி திருவள்ளூர் (தனி), கடலூர், மயிலாடுதுறை, சிவகங்கை, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கரூர்,  விருதுநகர், கன்னியாகுமரி, புதுச்சேரி ஆகிய பத்து தொகுதிகளில் போட்டியிடு கிறது என்று அறிவித்தார்.

திருச்சியில் மதிமுக போட்டி இதைத் தொடர்ந்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் அண்ணா அறிவாலயம் வருகை தந்த  அந்த கட்சி நிர்வாகிகளுடன் முத லமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் திருச்சி தொகுதி ஒதுக்குவது என்று முடிவு செய்யப்பட்டது. (வைகோ பேட்டி 5) இதில் திமுக தொகுதி பங்கீடு குழுவை சேர்ந்த டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எ.வ.வேலு, க.பொன்முடி, திருச்சி சிவா, அ.ராஜா, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 ஏற்கெனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மதுரை, திண்டுக்கல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திருப்பூர், நாகப் பட்டினம் (தனி), விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி) ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப் பட்டுள்ளன. மதிமுக திருச்சியிலும், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் இராமநாத புரத்திலும், கொங்கு மக்கள் தேசிய கட்சி  நாமக்கல் ஆகிய தொகுதிகளில் போட்டி யிடுகின்றன. தேசிய கட்சிகளான காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ தங்களது சின்னங்களில் போட்டியிடுகின்றன.

விடுதலை சிறுத்தைகள் கட்சி பானை சின்னத்தில், மதிமுக பம்பரம் அல்லது தேர்தல் ஆணை யம் ஒதுக்கும் சின்னத்திலும், முஸ்லிம்  லீக் ஏணி சின்னத்திலும் போட்டியிடு கின்றன. கொங்கு மக்கள் தேசிய கட்சி  திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் சிபிஎம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு பிரச்சார களத்தில் இறங்கியுள்ளனர். அதேபோல், முஸ்லிம் லீக் கட்சியும் வேட்பாளரை அறிவித்துவிட்டது. தற்போது, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வேட்பாளர்களை அறிவித்துள்ளன. ஓரிரு நாட்களில் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்களும் அறிவிக்கப்படுகிறார்கள்.

21 தொகுதிகளில் திமுக

இந்தியா கூட்டணிக்கு தலைமை ஏற்றிருக்கும் திமுக வடசென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம்(தனி), வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, ஆரணி, கள்ளக்குறிச்சி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி (தனி), கோவை, பொள்ளாச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி, பெரம்பலூர், தேனி ஆகிய 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது.