கடலூர், நவ.26- கடலூர் திருப்பாப்பலியூரில் பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தலைவர் எஸ்.வி.சேகர் தலைமையில் நடைபெற்றது
வியாபாரிகள் சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.கே.பக்கிரான், நடராஜன், ராஜா, குண சேகரன், குமரகுருபரன் உள்ளிட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர செயலாளர் ஆர்.அமர்நாத் கலந்து கொண்டார்.
கடலூரில் 100 ஆண்டுகளை கடந்த பழ மையான பான்பரி மார்க்கெட் கடைகளை அகற்றிய மாநகராட்சி நிர்வாகம், புதிதாக கடைகள் கட்டும் பணியை விரைந்து முடித்து ஏற்கனவே பயன்படுத்தி வந்த வியா பாரிகள் அனைவருக்கும் வழங்க வேண்டும். மார்க்கெட்டில் வியாபாரம் செய்யும் நூற்றுக்கும் மேற்பட்ட வியா பாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து, போக்குவரத்திற்கு சாலையை சரி செய்து தர வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
நிர்வாகிகள் தேர்வு
பான்பரி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தின் சிறப்புத் தலைவர்களாக கடலூர் நகர வணிகர் சங்கங்களின் கூட்ட மைப்பு மற்றும் பேரமைப்பின் தலை வர் ஜி.ஆர். துரைராஜ், சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் ஆகி யோரும் கவுரவத் தலைவர்களாக பி.தட்சிணாமூர்த்தி, டி.நடராஜன் ஆகியோரும் சங்கத்தின் தலைவராக எஸ்.கே.பக்கிரான், செயலாளராக ராஜா, பொருளாளராக எஸ். குணசேகரன், பொருளாளராக கமலக்கண்ணன், சங்க ஆலோசகராக எம்.எஸ். குமரகுருபரன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டனர்.