சென்னை,செப்.25- பட்டு மற்றும் பருத்தி ரகங்களில் சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கான விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கியுள்ளார்.
கடந்த 2023-2024 ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்காகத் தேர்வு செய்யப்பட்ட 6 பேருக்குப் பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ரூ.20 லட்சத்துக்கான காசோலைகளை வழங்கி முதலமைச்சர் மு.ஸ்டாலின் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறந்த வடிவமைப்பாளர்கள் மற்றும் இளம் வடிவமைப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.