சென்னை,ஆக.18- காங்கிரஸ் எம்.பி. ஜோதி மணி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:- புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பா ளர் வந்திதா பாண்டே ஐபி எஸ் மற்றும் அவர்கள் குடும்ப த்தினர் தொடர்பான ஆபாசமான, அருவருக்கத்தக்க,
ஒரு நாகரி கமான சமூகம் எவ்விதத்திலும் ஜீரணிக்கமுடியாத கமெண்ட்டுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தேன். ஒரு பெண்,அவர் காவல்துறை அதிகாரியாக இருந்த போதிலும் கூட அவர் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில், பொதுவெளியில் கொஞ்சம் வெட்கமோ, பயமோ இல்லாமல் ஆபாசமாக பேசுகின்ற துணிச்சல் எப்படி வருகிறது? இதை எப்படி ஒரு நாகரிகமான சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிற சமூகம் அனு மதிக்க முடியும்? அவரது கணவரை இழிவுபடுத்து வதாக நினைத்து, அவர் குடும்பத் துப் பெண்கள், குழந்தைகள் மீது ஆபாசத் தாக்குதல், அச்சு றுத்தல் கட்டவிழ்த்து விடுவது எவ்விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
ஒரு காவல்துறை அதிகாரிக்கு, அவர் குடும்பத்திற்கு இந்த நிலை என்றால் சாதாரண பெண்களின் நிலை என்ன? இதுபோன்ற இணைய, சமூக ஊடக, ஆபாசத் தாக்குதலால், எவ்வளவோ பெண்களும், அவர்கள் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ள னர்.
தமிழ்நாடு காவல்துறை, பெண்கள் மீதான இதுபோன்ற ஆபாச தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஒரு காவல்துறை அதிகாரியின் கண்ணியத்தை சீர்குலைப்பது என்பதை எளிதாக கடந்து போய்விட முடியாது. இது நாளை மற்ற பெண்கள் மீது இன்னும் மோசமாக ஏவப்படும். தமிழ்நாடு காவல்துறை, உடனடியாக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.