tamilnadu

மோசடி பேர்வழியிடமிருந்து ரூ.50 லட்சம் சொத்துகள் பறிமுதல்

மோசடி பேர்வழியிடமிருந்து  ரூ.50 லட்சம் சொத்துகள் பறிமுதல்'

அம்பத்தூர், ஜூன் 24- அம்பத்தூர் அருகே ரூ.2.46 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றவாளிகளிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்து களை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அம்பத்தூர் அடுத்த திருமுல்லைவாயல், ஸ்ரீநகர் காலனியைச் சேர்ந்தவர் தணிகை வேல், (43). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இதற்கிடையில் தணிகை வேலுக்கு அம்பத்தூரைச் சேர்ந்த சிவசங்கர் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. மேலும் சிவசங்கர், திருமுல்லைவாயல், சோழ புரத்தில் பங்குச்சந்தை, நிலம் வாங்கி விற்பனை உள்ளிட்ட தொழில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2021 - 2022ஆம் ஆண்டில், சிவசங்கர், தனது நிறு வனத்தில் முதலீடு செய்தால் 5 விழுக்காடு லாபத்தொகை தருவதாக தணிகை வேலிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்படி, தணிகைவேல், அவரது சகோதரர் ரவிக்குமார் உள்பட 5 பேர் சேர்ந்து சிவசங்கர், அவரது மனைவி வித்யா மற்றும் அலுவலக ஊழியர்களின் வங்கி கணக்கிற்கு பல தவணைகளாக ரூ. 3.20 கோடி வரை  அனுப்பியுள்ளனர். ஆனால், சிவசங்கர் மேற்கூறிய படி 5 விழுக்காடு லாபத் தொகையை தரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து பணத்தை திருப்பி கேட்ட போது, ரூ.74 லட்சத்தை மட்டும் அவர் திருப்பி கொடுத்தார். மீதமுள்ள ரூ.2.46 கோடி பணத்தை திருப்பி தராமல் தணிகைவேலு உள்ளிட்டோருக்கு  கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.   இது குறித்து தணிகைவேல் உள்ளிட் டோர் அளித்த புகாரின் அடிப்படையில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறை யினர் வழக்கு பதிவு செய்து, அம்பத்தூர், திருவேங்கடம் நகரைச் சேர்ந்த சிவசங்கர் (43), அவரது தம்பி அண்ணனூர், ஜோதி நகரைச் சேர்ந்த ராஜீவ்காந்தி (40) ஆகி யோரை கடந்த 8ஆம் தேதி கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேற்கண்ட இருவரையும் கடந்த 19ஆம் தேதி காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். அதில் மோசடி செய்த பணத்தி லிருந்து 4 சொகுசு கார்கள், 2 இரு சக்கர வாகனங்கள், வீட்டு மனைகள் மற்றும் விலை உயர்ந்த செல்போன் வாங்கியது தெரியவந்தது. இதையடுத்து காவல் துறை யினர் அவர்களிடமிருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்து, இருவருடன் சொத்துகளை நீதி மன்றத்தில்  ஒப்படைத்தனர்.