tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சென்னை புதிய காவல் ஆணையர் அருண்

சென்னை, ஜூலை 8- பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்  தலைவர் கே. ஆம்ஸ்ட் ராங், சென்னையில் கடந்த ஜூலை 5 அன்று இரவு வெட்டிப்படு கொலை செய்யப் பட்டார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, தலைநகர் சென்னையின் சட்டம் - ஒழுங்கு கேள்விக்கு உள்ளாக்கப் பட்டது. பொதுவாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அதிகரித்து வரும் கொலை மற்றும் கொலை முயற்சி  சம்பவங்களை கட்டுப்படுத்த உறுதி யான நடவடிக்கை எடுக்கப்படவேண் டும் என்று கோரிக்கைகளும் எழுந்தன.

இந்நிலையில், தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு ஏடிஜிபி-யாக டேவிட்சன் தேவாசீர்வாதத்தை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முக்கியமாக சென்னை பெருநகர காவல் ஆணையர்  சந்தீப் ராய் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையராக ஏடிஜிபி அருணை நியமனம் செய்துள் ளது.  சந்தீப் ராய் ரத்தோர் போலீஸ் பயிற்சிப் பள்ளி டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: மேலும் 3 பேருக்கு  நீதிமன்றக் காவல்!

சென்னை, ஜூலை 8- சென்னையில் பகு ஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படு கொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் துறை ஆற்காடு சுரே ஷின் தம்பியான ராணிப் பேட்டை மாவட்டம், காட்பாடி பொன் னை பகுதியைச் சேர்ந்த பொன்னை  பாலு, அவர் கூட்டாளிகளான சந் தோஷ், திருமலை, மணிவண்ணன், குன்றத்தூர் திருவேங்கடம், திருநின்ற வூர் ராமு என்ற வினோத், அதே பகுதி யைச் சேர்ந்த அருள், செல்வராஜ் உட்பட 8 பேரை கைது செய்தது.அவர்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இதனிடையே, இந்த கொலையில் தொடர்புடையவர்களாக சிவசக்தி, கோகுல், விஜய் ஆகிய மேலும் 3 பேரை யும் காவல்துறை கைது செய்த நிலை யில், அவர்கள் திங்களன்று சென்னை  எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் பட்டனர். அப்போது, அவர்களை ஜூலை 19 வரை சிறையிலடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தொடர்பு 
குட்கா முறைகேடு வழக்கு,  சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம்

சென்னை, ஜூலை 8- தமிழ்நாட்டில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவ தாக வந்த புகாரில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்பு துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண  பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிரான சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

மேலும், முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், பி.வி. ரமணா, சென்னை காவல்துறையின் முன்னாள் ஆணையர் உள்ளிட்ட ஒன்றிய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக கூடு தல் குற்றப்பத்திரிகையும் கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு சிபிஐ நீதிமன்ற நீதிபதி எழில் வளவன் முன்பு திங்களன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணை யை எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்து நீதிபதி உத்தரவிட்டார். 

ஆக. 6-8 இபிஎஸ்  ஓய்வூதியர்கள் தர்ணா

சென்னை, ஜூலை 6 - இபிஎஸ் ஓய்வூதியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 6 முதல் 8 வரை தில்லியில் தர்ணா நடத்து கின்றனர். அதனொரு பகுதியாக, இபி எஸ் ஓய்வூதியர்களுக்கு பிற மாநிலங் களில் வழங்குவது போல் தமிழக அரசும் கூடுதல் ஓய்வூதியம் வழங்க கோரி ஆகஸ்ட் மாதம் மாவட்ட ஆட்சியர் அலு வலகங்கள் முன்பு மனு அளிக்கும் இயக்கம் நடத்தப்படும் என்று இபிஎஸ் பென்ஷனர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் கே.பி. பாபுதெரிவித்துள்ளார்.

இபிஎஸ் பென்ஷனர்கள் நல சங்கங் களின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்னையில் நடை பெற்றது. அதன்பின்னர் இந்த தகவலை தெரிவித்த கே.பி. பாபு, சென்னை மாந கர போக்குவரத்துக் கழகத்தில் வழங்கு வது போன்று மாநிலம் முழுவதும் முதி யோர் பஸ் பாஸ் கோரிக்கை முன்வைத்து தேவையான முன்னெடுப்புகள் செய்யப்படும் என்றார்.