tamilnadu

குற்றவழக்கில் தலைமறைவானவர் 3 ஆண்டுகளுக்குப் பின் கைது

தேனி, ஜூன் 3-குற்ற வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு  தலைமறைவான  கம்பத்தை சேர்ந்த வாலிபரை  கம்பம் தெற்கு காவல்துறையினர் கைது செய்தனர் .கம்பம் ரேஞ்சர் ஆபிஸ் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன் மகன் சூர்யகாந்த்(28). இவர் ஒரு குற்ற வழக்கில் கம்பம் தெற்கு காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்தவர், வாய்தா தேதியில் ஆஜராகாமல் தலைமறைவானார். இவரை கம்பம் தெற்கு போலீஸார் தேடி வந்தனர். இதற்கிடையில் கம்பத்திற்கு சூர்யகாந்த் வருவதாக நீதிமன்ற போலீஸ் விக்னேஷ் கம்பம் தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் காவல் சார்பு ஆய்வாளர் சவடமுத்து மற்றும் தனிப்பிரிவு போலீசார்  சூர்யகாந்தை கைது செய்து, உத்தமபாளையம் குற்றவியல் நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். சூர்யகாந்த் மீது, கம்பம் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்களில் கடந்த 2010 முதல் 2018 வரை பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன.