tamilnadu

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்

சென்னை, ஜூன் 20- விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் பார்வை யாளர்களை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஜூலை 10 ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தேர்தல் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.  

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பொதுப்பார்வையாளராக அமித் சிங் பன்சால்  ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், செலவின பார்வையாளராக மனிஷ் குமார் மீனா நியமிக்கப்பட்டுள்ளார்.

காவல்துறை பார்வையாளராக அஜய் குமார் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார் என கூறினார். விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தலை யொட்டி 1324 தேர்தல் பணி யாளர்கள் பணியில் உள்ளனர். இந்தத் தொகுதியில் 9 வாக்கு சாவடிகள் பதட்டமானவை எனவும் கண்டறியப் பட்டுள்ளது. மேலும் வாக்குப்பதிவு அன்று வாக்காளர்களுக்கு எந்த விரலில் மை வைப்பது என்பது குறித்த விளக்கத்தை தேர்தல் கமிஷனிடம் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கேட்டுள்ளார். இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. பிறகு அறிவிப்பு வெளியாகும் என தெரி விக்கப்பட்டுள்ளது.