tamilnadu

img

தனிமனிதர்கள் இறந்தாலும் அவர்களால் உருவாக்கப்பட்ட கருத்தியலுக்கு மரணமில்லை! புத்தக வெளியீட்டு விழாவில் ஆ.ராசா பேச்சு

சென்னை, ஜூலை 30- முன்னாள் முதலமைச் சரும், மறைந்த திமுக தலை வருமான கருணாநிதி, அரசி யல் சாசனத்தின் கூறப்பட் டுள்ள இறையாண்மை, மதச்சார்பின்மை, மற்றும் ஜனநாயக கோட்பாடுகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றினார் என்று திமுக துணைப் பொதுச் செயலாள ரும் மக்களவை உறுப்பின ருமான ஆ. ராசா கூறினார்.

சென்னையில் கருணா நிதியின் நுற்றாண்டை நினைவுகூறும் வகையில் சீதை பதிப்பகம் பதிப்பித் துள்ள பல்வேறு எழுத்தாளர் களின் 32 புத்தகங்களை வெளியிட்டு அவர் பேசினார்.   தனி மனிதன் சாகலாம், ஆனால் தனிமனிதனால் உருவாக்கப்பட்ட கருத்தி யல் அமைப்பு என்றென்றும் வாழும். அப்படிபட்ட ஒருவர் தான் கருணாநிதி  என்றும் அவர் கூறினார். மதம் பாலினம், மொழி, சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் சமுதா யத்தில் நிலவும் வரை திராவி டமும்  அதன் கருத்தியலும் நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். செவ்வா யன்று வெளியிடப்பட்ட புத்தகங்களின் உள்ளடக் கங்கள் நூற்றாண் டிற்குப் பிறகும்  தேவைப்படு வதாக இருக்கும். இது ஆராய்ச்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசிய மயமாக்கப்பட்ட போது அப்போது அவரது அமைச்சரவையில் நிதி யமைச்சராக இருந்த மொரார்ஜிதேசாய் எதிர்த்தார். ஆனால் பிரதமர் இந்திரா காந்தியின் முடிவுக்கு கருணாநிதி ஆதரவு அளித்தார்.  மாநில சுயாட்சிக் கொள்கையில் திமுக எப்போதும் உறுதி யாக இருக்கும் என்றும் ராசா கூறினார்,

புதிய புத்தகங்களை அ.ராசா வெளியிட  தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோ.வி.செழியன் முதற்பிர தியை பெற்றுக்கொண்டு பேசுகையில்,  திமுக மாநில சுயாட்சி என்ற தனது கொள் கையில் உறுதியாக இருப்ப தால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசு கூட்டிய நி்தி ஆயோக் ஆட்சிமன்றக் குழுக் கூட்ட த்தை புறக்கணித்தார் என்றார். தமிழகத்தை ஒன்றிய அரசு தொடர்ந்து புறக்கணித்து வருவதற்கும் அவர் கண்டனம் தெரி வித்தார்.

இந்த நிகழ்ச்சியில் சீதை பதிப்பக பதிப்பாளர் ராஜ சேகரன், பத்திரிகையாளர் கோ.வி.லெனின்உள்பட பலர் கலந்து கொண்டனர்.