tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நில அபகரிப்பு புகார்: அதிமுக முன்னாள்  அமைச்சரின் சகோதரர் கைது

கரூர்,செப்.2- அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் சகோதரர் சேகரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். 

கரூரை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரிக்க முயன்றதாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. எம்.ஆர்.விஜய பாஸ்கரின் சகோதரர் சேகர் மற்றும் செல்வராஜ் ஆகியோரை கரூரில் சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இதே வழக்கில் கைதாகி, திருச்சி சிறையில் இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் தற்போது நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளார். எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேக ரின் முன்ஜாமீன் மனு கடந்த 3 நாட் களுக்கு முன் தள்ளுபடி செய்யப்பட்டது.

ஆம்னி பேருந்துகட்டணம் உயர்வு

சென்னை, செப்.2- ஒன்றிய அரசு சுங்கக்கட்டண தொகை யை அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் ஜூன் மாதம், தமிழ்நாட்டில் உள்ள 36 சுங்கச்சாவடி களில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது  25 சுங்கச்சாவடிகளிலும் கட்டண உயர்வு செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.

5 முதல் 7 விழுக்காடு வரை கட்டண உயர்வு அமலுக்கு வந்து, ரூ.5 முதல் ரூ.45 வரை கட்டணங்கள் உயர்ந்துள்ள தால் அத்தியாவசியப்பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டது. இந்த நிலையில், சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு காரணமாக ஆம்னி பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களுக்கு ஏற்ப ஐந்து ரூபாய் முதல் 150 ரூபாய் வரை கட்டண  உயர்வு அமலுக்கு வந்துள்ள நிலையில்,  ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை யும் அனைத்து ஆம்னி பேருந்து உரிமை யாளர் சங்கத்தினர் உயர்த்தியுள்ளனர்.

மேலும் இந்த கட்டண உயர்வு பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், நாடு முழுவதும் உள்ள காலாவதியான சுங்கச்சாவடிகளை ஒன்றிய அரசு தலையிட்டு உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும், இப் போது உயர்த்தப்பட்டுள்ள சுங்கச்சாவடி கட்டணத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் சார்பில் ஒன் றிய அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருத்தம்

நேற்றைய (2.9.2024) தீக்கதிர் முதல் பக்கத் தில் இடம் பெற்றுள்ள ரயில்வே சங்க அங்கீகார தேர்தல் தொடர்பான செய்தியில், டிஆர்இயு பொதுச் செயலாளர் அ.ஜானகிராமன் என வந்துள்ளது தவ
றாகும். அவர், டிஆர்இயு செயல் தலைவர் ஆவார். தவறுக்கு வருந்துகிறோம்.            - ஆசிரியர்