tamilnadu

img

மருத்துவர் காந்தராஜ் மீது திரைக்கலைஞர் ரோகிணி புகார்

பெண் திரைக்கலைஞர்கள் குறித்து சமூக வலைதளங்களில் இழிவாகப் பேசியதாக மருத்துவர் கந்தராஜ் மீது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் விசாகா குழுவின் தலைவர் ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்
சமீபகாலமாக யூடியூப் சேனல் பேட்டிகளில் பேசிய மருத்துவர் கந்தராஜ் என்பவர் தமிழக திரையுலகில் பெண்கள் வாய்ப்புக்காக எதை வேண்டுமானாலும் செய்வார்கள் என்கிற நோக்கில் மிகவும் இழிவாகப் பேசியிருந்தார். இந்த காணொளிகள் தற்போது சர்ச்சையான நிலையில், அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர் பேசிய காணொளியை உடனடியாக யூடியூபில் இருந்து நீக்க வேண்டும் எனவும் திரைக்கலைஞர் ரோகிணி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு புகாரளித்துள்ளார்