tamilnadu

img

பணித்தள பொறுப்பாளர்களை வேலை செய்ய விடாமல் தடுப்பவர்கள் மீது நடவடிக்கை

கிராம மக்கள் கோரிக்கை

விருதுநகர், ஜூன் 15- அருப்புக்கோட்டை ஒன்றியம், கோவி லாங்குளம் ஊராட்சியில் பட்டியல் இனத் தைச் சேர்ந்த பணித்தள பொறுப்பா ளர்களுக்கு வேலை வழங்காமல் இருப்ப தாக வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி துணைத் தலைவர் மீது பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை புகார் மனு அளித்தனர்.  அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்கு உட் பட்டது கோவிலங்குளம் ஊராட்சி. இதில் பெரிகரிசல்குளம் மற்றும் கோவிலங் குளத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளர் கள், 100 நாள் வேலைத் திட்டத்தில் சேர்ந் துள்ளனர். பணித்தள பொறுப்பாளர்களாக கடந்த 12 வருடங்களாக சிலர் இருந்துள் ளனர். இந்த நிலையில், ஊராட்சித் தலை வராக பாலசுப்பிரமணியன், துணைத் தலை வராக கோபால் ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர்.  இதையடுத்து, 100 நாள் வேலைத் திட் டத்தில் பணித்தள பொறுப்பாளர்காக பட்டி யல் இனத்தைச் சேர்ந்த கலா, சிந்துஜா ஆகி யோர் கடந்த ஜூன்.10- ஆம் தேதி தேர்ந்தெ டுக்கப்பட்டதற்கான உத்தரவை வடடார வளர்ச்சி அலுவலர் வெளியிட்டுள்ளார்.  இதையடுத்து, துணைத் தலைவர் கோபால் வட்டார வளர்ச்சி அலுவலரிடம், அவர் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களை பணித்தள பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் இல்லாவிட்டால் பணி செய்ய விடமாட்டேன் என தடுத்து வருகிறார். இத னால் 100 நாள் வேலை நடைபெறவில்லை. விவசாயக் கூலிகள் வேலையின்றி கஷ் டப்பட்டு வருகின்றனர். எனவே, வட்டார வளர்ச்சி அலுவரால் நியமிக்கப்பட்ட பணித் தள பொறுப்பாளர்கள் மூலம் 100 நாள் வேலை நடைபெற உத்தரவிட வேண்டும் என ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.