tamilnadu

img

தொழிலாளர் விரோத போக்கை கைவிடுக

தருமபுரி, ஆக.2- மத்திய பாஜக அரசு கார்ப்பரேட் களுக்கு சாதகமாக தொழிலாளர் சட்டத் திருத்த மசோதாவை கைவிட  வேண்டும் என வலியுறுத்தி சேலம்,  தருமபுரி மற்றும் ஈரோடு மாவட்டங் களில்  அனைத்து தொழிற் சங்கங் களின்  சார்பில் வெள்ளியன்று கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  மத்திய மோடி அரசு மோட்டார் வாகன சட்ட திருத்தத்தைத் திரும்பப் பெற வேண்டும். 44 தொழிலாளர் சட்டங்களை முதலாளிகளுக்கு சாதக மாகத் திருத்தக் கூடாது. சேலம் உருக் காலை, ரயில்வே, பிஎஸ்என்எல் போன்ற பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு தாரை வார்க்கக்  கூடாது. அனைவருக்கும் குறைந்த பட்ச ஊதியம் ரூ. 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் சார்பில் தருமபுரி தொலைபேசி  நிலையம் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத்து தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்பாளரும், சிஐடியு மாவட்டச் செயலாளருமான சி.நாக ராசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி  மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ் வரன், மாவட்டச் செயலாளர் கே.மணி,  ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் கே.முருகன், மாவட்டச் செயலாளர் எம்.ராஜேந்திரன், எல்பிஎப் மாவட்டத் தலைவர் கே.அன்புமணி, மாவட்டப் பொருளாளர் பி.எம்.சண்முகராஜா, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.நாக ராஜன், எச்எம்எஸ் மாவட்டத் தலைவர்  எம்.அர்ச்சுணன், ஏஐசிசிடியு மாவட்டச் செயலாளர் சி.முருகன் ஆகி யோர் கோரிக்கைகளை விளக்கி  பேசினர். முடிவில், சிஐடியு  மாவட்டப் பொருளாளர் ஏ.தெய் வானை நன்றி கூறினார்.  

சேலம்

இதேபோல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தொமுச  நிர்வாகி பழனியப்பன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் சிஐடியு மாநிலத்  துணைத்தலைவர் ஆர்.சிங்கார வேலு,  மாநில குழு உறுப்பினர் ஆர். வெங்கடபதி, மாவட்ட செய லாளர் டி.உதயகுமார், மாவட்டத்  தலைவர் பி.பன்னீர்செல்வம், மாநில  குழு உறுப்பினர் எஸ்.கே.தியாக ராஜன், ஏஐடியுசி மாவட்டச் செய லாளர் விமலன், எச்எம்எஸ் செய லாளர் கணேசன், ஐஎன்டியுசி நிர்வாகி நடராஜன்,  ஏஐசிசிடியு வேல் முருகன் உள்ளிட்ட அனைத்து தொழிற் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

ஈரோடு

நால்ரோடு பகுதியில் அனைத்து  தொழிற்சங்கங்களின் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த  ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாவட்ட செயலாளர் எச்.ஸ்ரீராம் தலைமை வகித்தார். எஇடியுசி மாவட்ட தலைவர் எஸ்.சின்னசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.சுப்பிரமணியன், எல்பிஎப் மாவட்ட கவுன்சில் செய லாளர் ஜோ.சுந்தரம், எம்எல்எப் மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.காளி யப்பன், எல்எல்எப் மாவட்ட செய லாளர் எ.வெற்றிச்செல்வன், ஏஐடியுசி மாவட்ட செயலாளர் எஸ். சுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து  கொண்டு கோரிக்கைகளை வலியு றுத்தி கண்டன முழக்கமிட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளா னோர் பங்கேற்று மத்திய  அரசின் தொழிலாளர் விரோத  நடவடிக்கைகளை கண்டித்து  ஆவேச முழக்கங்களை எழுப்பினர்.