tamilnadu

img

‘சிறப்பாக செயல்படும் பள்ளி மேலாண்மைக்குழு’

12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று, முதல் தலைமுறையாக கல்லூரி செல்லும் விளிம்புநிலை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு, சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 25 மாணவ -மாணவிகள் மற்றும் மணிப்பூரைச் சேர்ந்த ஒரு மாணவி என மொத்தம் 26 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பேசுகையில், “சமுதாயத்தில் என்ன நடக்கிறது என்பதே நமக்கு தெரியாமல் போவதால், பள்ளி, கல்வி தொடர்பான கருத்துக்களை யூடியூபில் வெளியிட்டு அதனை பிரபலமாக்கவும்” எனக் கேட்டுக்கொண்டார். நடிகர் சூர்யா பேசுகையில் , கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மேலாண்மைக் குழு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வி ஒரு ஆயுதமாக உள்ள நிலையில், அதனை உணர்ந்து அனைவரும் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்று தெரிவித்தார்.