tamilnadu

சென்னையில் வீட்டு வேலை செய்த சிறுமி அடித்துப் படுகொலை

சென்னை,நவ.5 - சென்னையில் வீட்டு வேலை செய்த  சிறுமி அடித்துப் படுகொலை செய்யப் பட்ட சம்பவத்திற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. தனி அதிகாரியை நியமித்து துரிதமாக விசாரணையை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் அ.ராதிகா ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கை வரு மாறு:

தஞ்சை மாவட்டத்திலிருந்து வீட்டு  வேலைக்கு அழைத்து வரப்பட்ட சிறுமி சென்னையில் வீட்டு உரிமையாளர் மற்றும் அவர்களின் உறவினர்களால் சித்ரவதை செய்யப்பட்டு கொடூர மான முறையில் படுகொலை செய்யப் பட்டுள்ளார்.

அமைந்தகரை மேத்தா நகர் பகுதியைச் சேர்ந்த முகமது நவாஸ் மற்றும் அவரது மனைவி நாசியா. இவர்கள் தஞ்சை வேப்பத்தூர் பேரூ ராட்சி அம்மன் பேட்டை கிராமத்தில் இருந்து 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து வந்துள்ளனர்.

அச்சிறுமியை நாசியா,அவரது கணவர் நவாஸ் மற்றும் அவரது உற வினர்கள் பல்வேறு வகைகளில் தொட ர்ந்து சித்ரவதை செய்து வந்துள்ளனர். இந்நிலையில் அக்டோபர் 31ஆம் தேதி  நாசியா மற்றும் அவர்களது குடும்ப நண்பர்கள் சிலர் இணைந்து குழந்தை யை மிக மோசமாக சித்ரவதை செய்து உடல் முழுவதும் சூடு வைத்து துன்புறுத்தியுள்ளனர்.அவர்கள் தாக்கியதில் அச்சிறுமி உயிரிழந்தார்.

உயிரிழந்த சிறுமியின் உடலை குளியல் அறையில் போட்டுவிட்டு வீட்டை பூட்டிவிட்டு அனைவரும் வெளியே சென்று விட்டனர்.

இந்த கொடூரமான படுகொலை யை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

இக்கொலையில் அமைந்தகரை காவல்துறை குழந்தைகளை பாலியல்  வன்முறையில் இருந்து பாதுகாக்கும் சட்டம் போக்சோ  மற்றும் எஸ்சி /எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும்  ஜே.ஜே. ஆக்ட் (J J act) சட்டப் பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவு செய்து ஆறு பேரை கைது செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட நாசியா இப்படுகொலைக்கான காரணத்தை காவல்துறையிடம் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

தனது கணவர் நவாஸ் பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவர் என் றும் சமீப காலமாக அவரின் பார்வை வீட்டில் வேலை செய்யும் சிறுமியின் பக்கம் திரும்பியதாகவும் எனவே தானும் தன்னுடைய நண்பர்களும் இணைந்து அச்சிறுமியை கொலை செய்ததாக காவல்துறையிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்.

குற்றவாளிகளை பாதுகாக்கும்  நோக்குடன் காவல்துறை 

வறுமையின் பிடியில் உள்ள குழந்தையின் தாய் தன்னுடைய குழந்தையின் உடலை வாங்கிச் சென்று தனது சொந்த ஊரில் இறுதி நிகழ்வை கூட நடத்த முடியாமல் காவல்துறையின் உதவியை நாடிய போது சென்னை காவல்துறை சென்னையிலேயே சிறுமியின் உடலை எரியூட்டுவதற்கு உதவி செய்துள்ளது,

காவல்துறையின் இத்தகைய செயல் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி  உள்ளது. மர்மமான முறையில் இறந்துள்ள அச்சிறுமியின் உடலை அடக்கம் செய்யாமல் காவல்துறையே எரிப்பதற்கு உதவியாக இருந்திருக் கின்றது என்பதை பார்க்கும்போது குற்றவாளிகளை பாதுகாக்கும் நோக்குடன் காவல்துறை செயல்பட்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழகத்தில் இதுபோன்று வறுமை யின் பிடியில் உள்ள ஏராளமான குழந்தைகள் பள்ளிக் கல்வியை முடிக்க முடியாமல் குழந்தை தொழி லாளிகளாக பல்வேறு இடங்களில் வேலை செய்து வருகின்றனர்.

தமிழக அரசு பள்ளியில் இடை விலகும் குழந்தைகள் குறித்து மிகவும் கவனத்துடன் இருந்து அக்குழந்தை களின் பள்ளிக்கல்வியை உத்தரவாதப் படுத்திட முழு முயற்சி எடுக்கவேண்டும்.

மேலும் இவ்வழக்கில் எஸ்சி., எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட பிரிவுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் குழந்தையின் குடும்பத்திற்கு சட்டப் படியான நிவாரணத்தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும், குடியிருக்க வீடும் வழங்க வேண்டும். 

மேலும் எஸ்சி/எஸ்டி வன்கொடு மை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதால்  தனி விசாரணை அதிகாரியை நியமித்து வழக்கை துரிதமாக நடத்தி குற்றவாளி கள் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். 

இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.