tamilnadu

img

5000 இடங்களில்... 1ம் பக்கத் தொடர்ச்சி

ஒரே பாடத்திட்டம், ஒரே பாடநூல்கள், ஒரே பயிற்றுவிப்பு என்ற வகையில் மாற்றப்படுகிறது. நவீன அறிவியல் வளர்ச்சி, சமூக மேம்பாட்டுத் தேவைகளுக்கு ஏற்றவாறு மாறுதல்களை கல்வியில் கொண்டு வருவதற்கு பதிலாக, மிகவும் பின்னோக்கிச் செல்லும் வகையில் புராதன குருகுல முறைக்கு நாட்டை கொண்டு செல்கிறது புதிய கல்விக் கொள்கை. 

கல்வி உரிமைச் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் பள்ளிக் கல்வியை தனியாருக்கு விட்டு கட்டணங்களை உயர்த்துவதற்கு புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது.10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுடன் கூடுதலாக மூன்று, ஐந்து, எட்டாம் வகுப்புகளுக்கு தேசிய பொதுத்தேர்வு நடத்துவது என அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பல தேர்வுகளை நடத்துவது,  ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளை வடிகட்டி, அவர்களின் கல்வி வாய்ப்பை பறித்திடுகிற முயற்சியே. நாட்டின் ஜனநாயக, மதச்சார்பற்ற அடிப்படை கோட்பாடுகள்  அனைத்தையும் புதிய கல்விக் கொள்கை தகர்க்கிறது. நமது எதிர்காலத் தலைமுறை மீது மத்திய அரசு பெரும் தாக்குதலை தொடுத்துள்ளது.

எதிர்ப்பியக்கம்
எனவே, இதற்கெதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மக்களின் எதிர்ப்பியக்கம் வழியாக புதிய கல்விக் கொள்கையை  முற்றாகத் திரும்பப் பெற மத்திய அரசை நிர்ப்பந்திக்கும் வகையில் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் பிரச்சாரத்தை நடத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.தமிழகத்தில் 2019 ஜூலை 25 முதல் 30 வரை 5000க்கும் மேற்பட்ட இடங்களில் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெறும். புதிய கல்விக் கொள்கை மீதான ஆபத்தை மக்களிடம் விளக்கி,  அவர்களது எதிர்ப்பைத் திரட்டும் வகையில் ஒரு கோடி கையெழுத்துகளை பெறுவதற்கானமாபெரும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநடத்திடும். இந்த பேரியக்கத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி அணிகள் முழுவதும் களமிறங்குகின்றன.புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நடைபெறும் இந்த பேரியக்கத்திற்கு பல்வேறு மக்கள் அமைப்புகள் உள்ளிட்டு, ஒட்டுமொத்த தமிழக மக்களும் பேராதரவு நல்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறது.