tamilnadu

குடிமராமத்தில் மேலும் 5 ஆயிரம் ஏரிகள்

சென்னை, செப்12- குடிமராமத்து திட்டத்தின் கீழ் மேலும் 5 ஆயிரம் ஏரிகளை  புனரமைத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளநிலையில் அதற்கான திட்டமதிப்பை தயாரிக்க அனைத்து மாவட்ட தலைமை பொறியாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாக்க கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சிறப்புத் திட்டம் குடிமரா மத்து. இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள தூர் வாரப்படாத நீர் நிலைகளை கண்டறிந்து தூர் வாருவ தோடு, நீர்நிலைகளை பலப்படுத்தும் பணிகளில் அரசு ஈடுபட்டு வருகிறது. 100 கோடி ரூபாய் செலவில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. பிறகு, 2018 ஆம் ஆண்டில் ரூ. 331 கோடி ஒதுக்கப்பட்டன. இந்த ஆண்டு ரூ. 500 கோடி யில் 1, 829 ஏரிகள் தூர் வாரி புனரமைக்க முடிவு செய் யப்பட்டன. இந்த நிலையில், வரும் ஆண்டு மேலும் 5 ஆயிரம்  ஏரிகளை தூர் வார தமிழக அரசு முடிவு செய்துள்ளது.  இதற்காக அனைத்து மண்டல தலைமை பொறியாளர்க ளுக்கும் பொதுப்பணித்துறை நீர்வள தலைமை பொறி யாளர் ராமமூர்த்தி சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில்  5 ஆண்டுகளாக தூர் வாரப்படாத ஏரிகளை கண்டறிந்து திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தியுள் ளார். திட்ட அறிக்கை கிடைத்ததும் முன்னுரிமை அடிப்படையில் ஏரிகள் தூர்வாரப்படும் என்றும் பொதுப்பணித்துறை நீர்வள  தலைமை பொறியாளர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.