tamilnadu

4,813 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல்

சென்னை, செப். 19- தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் கடத்தப்பட்ட 27.20 லட்சம் ரூபாய் மதிப் புள்ள ரேசன் அரிசியை அதிகாரிகள் பறி முதல் செய்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:- குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்யப்படும் அத்தியாவசிய பொருட் களை சிலர் முறைகேடாக கள்ளச் சந்தை யில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத் துடன் செயல்பட்டு வருகின்றனர். உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலு வலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு கடத்தல் மற்றும் பதுக் கலை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அத்தியாவசியப் பொருட்கள் கடத் தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர் கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 5ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை ஒரு வார காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற 27 லட்சத்து 21 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள, 4,813 குவிண்டால் பொது விநியோகத் திட்ட அரிசியும், அந்த கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 54 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 174 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

;