tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

துணை முதல்வர் வழங்கிய 1500 பட்டா !

சென்னை திருவொற்றியூரில் நடைபெற்ற அரசு விழாவில், 1500 பயனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டாக்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செவ்வாயன்று (மே 13) வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, சட்டமன்ற உறுப்பினர்கள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர்  பெ. அமுதா, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், நில நிர்வாக ஆணையர் டாக்டர். கே.எஸ். பழனிசாமி,  மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே உள்பட அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

செங்கல்பட்டு அரசு கல்லூரியில் விண்ணப்பம் வரவேற்பு

 செங்கல்பட்டு, மே 13- செங்கல்பட்டு இராஜேஸ்வரி வேதா சலம் அரசு கலைக் கல்லூரியில் இந்த கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு இள நிலை பாடப்பிரிவுகளுக்கான தமிழ் வழி, ஆங்கில வழி, சுழற்சி 1, சுழற்சி 2ல் படிக்க மாணவர்கள் விண்ணப்பிக்க லாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இளங்கலை பாடப் பிரிவு களான தமிழ், ஆங்கிலம், வரலாறு, அரசி யல் அறிவியல், வணிகவியல், வணிக நிர்வாக வியல், மற்றும் இளம் அறிவியல் பாடப்பிரிவு களான கணிதவியல், இயற்பியல், வேதி யியல், உயிரியியல், கணினி அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மாணவர் சேர்க்கைக் கான விண்ணப்பங்கள் 7.5.2025 முதல் 27.5.2025 வரை மாணவ, மாணவிகள் www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க லாம். இக்கல்லூரியில் மாணவர்கள் இணைய வழி விண்ணப்பித்தல் தொடர் பாக தகவல்களை பெற மாணவர் உதவி மையம்  கல்லூரி வளாகத்திலேயே அமைக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க  பதிவு கட்டணம் ரூ.50, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி மாண வர்கள் பதிவு கட்டணம் ரூ.2 செலுத்தி விண்ணப்பிக்கலாம் என கல்லூரி முதல்வர் (பொறுப்பு)  ஜ. சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரி வித்துள்ளார்.

துறைமுகம் பகுதியில் தண்ணீர் பந்தல் திறப்பு

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் துறைமுகம் பகுதி திருவள்ளுவர் நகர் கிளை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி ஞாயிறன்று (மே 11) நடைபெற்றது. இந்நிகழ்வில் சங்கத்தின் மத்தியசென்னை மாவட்டத் தலைவர் ஜெ.பார்த்திபன், செயலாளர் கே.மணிகண்டன், பொருளாளர் லோ.விக்னேஷ், செயற்குழு உறுப்பினர் அருண், பகுதி ஒருங்கிணைப்பாளர் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.