tamilnadu

img

தமிழகத்தில் இன்று புதிதாக 1,009 பேருக்கு கொரோனா தொற்று ; 10 பேர் பலி

தமிழகத்தில் இன்று 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 10 பேர் உயிரிழந்துள்ளனர். 
தமிழகத்தில் இன்று புதிதாக 1,009  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,14,170 ஆக அதிகரித்துள்ளது. 
இன்று 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 12,069ஆக அதிகரித்துள்ளது.  
இன்று  1,091 பேர் குணமடைந்துள்ளனர்.  இதுவரை 7,93,154 பேர் குணமடைந்துள்ளனர்.

;