tamilnadu

img

பணி நிரந்தரம் கோரி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் போராட்டம்

புதுச்சேரி சுகாதாரத் துறையில் வாரிசுதாரர்களை கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று  சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்ததை நிறைவேற்றக்கோரி வாரிசுதாரர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் சட்டப்பேரவை அருகில் 22வது நாளாக குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (மார்ச் 11) நடைபெற்றது.

பணி நிரந்தரம் கோரி 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள்  போராட்டம்'

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் புதுச்சேரி அரசை வலியுறுத்தியுள்ளது. புதுச்சேரி அரசின் ஊரக வளர்ச்சித்துறை யில்  16 ஆண்டுகளாக மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தை அமல்படுத்தும் பணியில் பணியாற்றி வரும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்.நிலுவையில் உள்ள 3 மாத ஊதியத்தை ஊழியர்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஒரு வாரகாலமாக  தொடர் முழக்கப் போராட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி அண்ணாநகரில் உள்ள துறை யின் அலுவலகம் முன்பு நடைபெற்ற தொடர் முழக்கப் போராட்டம் வாழ்த்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தமிழ்ச்செல்வன் பேசினார். சங்க நிர்வாகி கள் விநாயகம், தட்சிணாமூர்த்தி ஆகி யோர் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்று பேசினர். புதுச்சேரி அரசு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை உடனே பணி  நிரந்தரம் செய்ய வேண்டும். 100  நாள் பயனாளிகளின் நிலுவை சம்ப ளத்தை உடனே வழங்க வேண்டும். இக்கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்றால் மாநிலம் முழுவதும் உள்ள விவ சாய தொழிலாளர்களை அணிதிரட்டி அரசுக்கு எதிராக போராட்டத்தை அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் நடத்தும் என்றார்.