tamilnadu

img

கவிஞர் மு.மேத்தா, பாடகி பி. சுசீலாவுக்கு கலைத்துறை வித்தகர் விருது முதலமைச்சர் வழங்கினார்

சென்னை,அக்.4- முன்னாள் முத லமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு நினைவினைப் போற்றும் வகையில் கவிஞர் மு.மேத்தா மற்றும் பின்னணிப் பாடகி பி. சுசிலா ஆகியோருக்கு, கலைஞர் நினைவு கலைத் துறை வித்தகர் விருது களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெள்ளி யன்று தலைமைச் செய லகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினார். 

விருதுடன் தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், நினைவுப் பரிசும் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி -செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், தலைமைச் செயலாளர் நா. முரு கானந்தம், தமிழ் வளர்ச்சி-செய்தித் துறை  செயலாளர் வே. ராஜா ராமன், செய்தி மக்கள் தொடர் புத் துறை இயக்குநர் இரா. வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் முத லாமாண்டு விருதுகளை, தன் மயக்கும் குரலால் பல லட்சம் இரசிகர்களின் மனங்களில் குடியேறிவிட்ட ‘தென்னிந்தியாவின் இசைக்குயில்’ பி.சுசீலா அவர்களுக்கும் - வளமான எழுத்துகளால் கோக்கப்பட்ட வைர மாலையெனக் கவிதைகள் படைத்திட்ட கவிஞர் மு.மேத்தா அவர்களுக்கும் வழங்கி நிரம்ப மகிழ்ச்சியும் பெருமையும் கொண்டேன்” என்று தெரிவித்துள்ளார்.