tamilnadu

img

தென் சீனா கடலில் அமெரிக்க போர் கப்பல் சென்றதால் பதற்றம்!

தென் சீனா கடல் பகுதியில் அமெரிக்க போர் கப்பல் சென்றது பதற்றமான சூழ் நிலையை உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் வர்த்தக போர் வலுவடைந்து வரும் நிலையில், தென் சீனா கடல் பகுதியான ஸ்கார்போரங் ஷோலில் அருகே அமெரிக்க போர் கப்பல் சென்றதுள்ளது. இதை அடுத்து சீனா கடல்படை மற்றும் விமாணப்படை (பிஎல்ஏ), அந்த போர் கப்பலை திரும்பி செல்லும் படி எச்சரித்துள்ளது.

ஈரான் மீது பொருளாதார தடை நடவடிக்கையை அமெரிக்க அரசு எடுத்துள்ள நிலையில், அந்த விதிமுறைகளை மீறி, ஹூவாயின் துணை நிறுவனமான ஸ்கைகாம் ஈரானில் தொழில் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சீனா உளவாளியாகச் செயல்பட்டு அமெரிக்க தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து பல முறை எச்சரிக்கை செய்திருப்பதாகவும் அமெரிக்கா கூறியிருந்தது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை ஹூவாய் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.