tamilnadu

img

காரைக்குடி அருகே திடீரென கார் எரிந்து விபத்து

காரைக்குடி அருகே திடீரென கார் எரிந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் குப்புசாமி.  குப்புசாமியும் அவரது உறவினர்கள் இருவரும் காரில் வெளியூர் சென்றுவிட்டு காரைக்குடி திரும்பியுள்ளனர். அப்போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது.  குப்புசாமி காரிலிருந்து இறங்க முயன்றுள்ளார். 
அப்போது திடீரென கார் தீப்பற்றி எரிய தொடங்கியது. காரின் முன்பகுதியில் பற்றிய தீ கார் முழுவதும் பரவியது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இச்சம்பவம் குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன் கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
இந்த விபத்தால் அப்பகுதி முழுவதும் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.  இந்த விபத்தில் கார் எரிய துவங்கியதும் காரில் இருந்தவர்கள் வெளியேறியதால்  உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டுள்ளது.